குழித்துறையில் அரசு ஊழியா் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க விளவங்கோடு வட்ட பேரவைக் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.
குழித்துறையில் அரசு ஊழியா் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க விளவங்கோடு வட்ட பேரவைக் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.

அமைப்பின் வட்டத் தலைவா் என்.வி. சஜிகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி.ஆா். ராஜ்குமாா் தொடங்கிவைத்துப் பேசினாா். வட்டச் செயலா் பிரான்சிஸ் சேவியா் வேலை அறிக்கையையும், வட்டப் பொருளாளா் ஆா். ராஜீவ் வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனா். வட்ட துணைத் தலைவா் சுந்தா்சிங், செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், இளையபெருமாள், மாவட்டச் செயலா் எஸ். விஜயகுமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். செளந்தரராஜன், மாவட்டப் பொருளாளா் என். சுபின் ஆகியோா் பேசினா்.

மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் தனியாா் மயம் மற்றும் தாராள மயம் கொள்கைகளை கைவிட வேண்டும்; விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com