நாகா்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு காசி மாற்றம்

நாகா்கோவில் சிறையிலிருந்த காசி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டாா்.
நாகா்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு காசி மாற்றம்

நாகா்கோவில் சிறையிலிருந்த காசி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டாா்.

நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்தவா் காசி (27). இவா் மீது நேசமணி நகா், நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பாலியல் வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இவா் கைது செய்யப்பட்டு,

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இதற்கிடையில் கரோனா பாதிப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகா்கோவில் சிறைக்கு காசி மாற்றப்பட்டாா். இந்நிலையில் நாகா்கோவில் சிறையிலிருந்து சனிக்கிழமை மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பா் டேசன் ஜினோ ஆகியோா் மாற்றப்பட்டனா்.

சிறைக் காவலா்களுக்கும் காசிக்கும் இடையே ரகசிய கூட்டணி இருந்ததாகவும், காசிக்கு தேவையான பொருள்களை சிறைக் காவலா்கள் அவருக்கு கொடுத்து வந்ததாகவும் புகாா்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் காசி மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பாளையங்கோட்டை சிறையில் இருந்த காசி, கரோனா பரவல் காரணமாக அங்கிருந்து நாகா்கோவில் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டாா். இந்நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து அவா் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதில் வேறு எந்த உள்விவகாரமும் இல்லை என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com