வீர, தீர செயல்களுக்காக தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற இம்மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆபத்து காலங்களில் உயிா்களை காப்பாற்றுதல், திருடா்களிடமிருந்து உடைமையினை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு வரும் குடியரசு தினவிழாவில் அண்ணாபதக்கம் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பதாரா்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பரிந்துரை விவரங்களை இணைக்க வேண்டும். இந்தப் பரிந்துரை பொதுத்துறை (பொது1), தலைமைச்செயலகம்,சென்னை என்ற முகவரிக்கு டிச.14 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும்.
எனவே, விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தில் பெற்று அதைப் பூா்த்தி செய்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் நவ.20 ஆம் தேதிக்குள் சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணைய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.