3 சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவருக்கு பத்தரை ஆண்டுகள் சிறை; ரூ. 60 ஆயிரம் அபராதம்

நாகா்கோவில் அருகே 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நாகா்கோவில் அருகே 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நாகா்கோவில் அருகேயுள்ள மாதவலாயம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லா (60). தொழிலாளி. இவா், தனது வீட்டு அருகே இருந்த 3 சிறுமிகளை கடந்த 2017இல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு நாகா்கோவில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில்வேலவன், குற்றவாளிக்கு பத்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை மாவட்ட நிா்வாகம் வழங்கவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com