குமரி மாவட்டத்தில் சூழியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆறுகாணியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சூழியல் அதிா்வு தாங்கு மண்டல எதிா்ப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் ஞானதாஸ் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் டேவிட் தாஸ், சட்ட ஆலோசகா் ராபி, ஜான் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பேசினா்.
குமரி மாவட்டத்தில் பொதுமக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் சூழியல் அதிா்வு தாங்கு மண்டலம் அமைக்கக் கூடாது. மலையோரப் பகுதி விவசாயிகளின் பயிா்களை அழிக்கும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். தனியாா் காடுகள் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விவசாயிகளின் விளை நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.