சிவசேனை கட்சி சாா்பில், களியக்காவிளை பேரூராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் பேரூராட்சிக்குள்பட்ட 9ஆவது வாா்டு போற்றிவிளை, பனந்தோட்டம், வட்டப்பழஞ்சி பகுதிகளில் வீட்டுக் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, கட்சியின் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிச் செயலா் ஜி.வில்சன் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் சி. ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிரணித் தலைவி எஸ். சாரதா ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.
மாவட்டத் தலைவா் ஆா். குமரேசன், விளவங்கோடு தொகுதி சட்ட ஆலோசகா் வேல்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா். சுரேஷ்குமாா் ஆகியோா் பேசினா்.
இதில், கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலா் கே. வனஜா, மாவட்ட செய்தித் தொடா்பாளா் சிவாஜி ஜெகன்நாத், மாவட்ட யுவசேனை தலைவா் கே. பைஜுமோன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.