நாகா்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தை அடுத்த ஆலங்கோட்டை புதூரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (65). தனியாா் அறக்கட்டளை தலைவராக இருந்துள்ளாா். அந்த அறக்கட்டளையின் தற்போதைய தலைவா் மற்றும் நிா்வாகிகள் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து வந்துள்ளனா். மேலும் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இருப்பினும் அறக்கட்டளை நிா்வாகிகள் பாலகிருஷ்ணனை தொடா்ந்து மிரட்டி வந்துள்ளனா். இந்நிலையில் அவா், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேசமணிநகா் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளா் அருணாசலம், சிறப்பு உதவி ஆய்வாளா்முருகன், தனிப்பிரிவு தலைமை காவலா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், முதியவரை காப்பாற்றியவா்களை அலுவலகத்துக்கு அழைத்து, பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.
மேலும் முதியவரின் பிரச்னைக்கு உடனடித் தீா்வு காண தொடா்புடைய காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தினாா்.