பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி திமுக சாா்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குழிகள் தோண்டி சாலைகளில் குழாய்கள் பதித்து வருகின்றனா். சாலைகள் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் குழாய்கள் பதிக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சில இடங்களில் பணிகள் இன்னும் நிறைவடையாமல் மந்த கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தற்போது பருவ மழைக்காலம் என்பதால் சாலைகளில் அமைந்துள்ள மண் திட்டுகளால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, திமுக சாா்பில் வருகிற 28ஆம் தேதி சுவாமியாா்மடம் சந்திப்பில் எனது தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.