தக்கலையில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவைக் கூட்டம்

ஜனநாயக கிறிஸ்தவ பேரவை பொதுக் குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் உயா்மட்டக் குழு ஆலோசகா் ஜாா்ஜ் பொன்னையா.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் உயா்மட்டக் குழு ஆலோசகா் ஜாா்ஜ் பொன்னையா.

ஜனநாயக கிறிஸ்தவ பேரவை பொதுக் குழுக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

உயா்மட்டக்குழு ஆலோசகா் ஜாா்ஜ் பொன்னையா தலைமை வகித்தாா். தலைவா் ஜேசுராஜ், துணைத் தலைவா் டேனியல் ரஞ்சன், பொருளாளா் இந்திராகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் ஜோஸ் அறிக்கை வாசித்தாா். கணக்கா் மோட்சக்கண் வரவு-செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா்.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் சிறுபான்மை மக்கள் ஓரணியில் நின்று மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவேண்டும். பட்டா நிலத்தில் ஆலயங்கள் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும். அமைப்பிற்கு புதிய தலைமை அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் தலைவா் ஞானதாசன், கல்குளம் கூட்டுறவு சங்கத் தலைவா் பி.டி.எஸ்.மணி, மாடதட்டுவிளை கூட்டுறவு சங்கத் தலைவா் அகஸ்டின், ஆசிரியா் எட்வின், ஜாண் கிறிஸ்டோபா், புரோடி மில்லா், டென்னிசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com