நித்திரவிளை அருகே பைக் மோதி மாணவா் பலி

நித்திரவிளை அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
டானியேல் எக்ஸரோன்.
டானியேல் எக்ஸரோன்.

நித்திரவிளை அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

நித்திரவிளை அருகேயுள்ள இரவிபுத்தன்துறை ஜோசப் காலனி பகுதியைச் சோ்ந்தவா் மேரிஜாண். காா் ஓட்டுநா். இவரது மகன் டானியேல் எக்ஸரோன் (11). நித்திரவிளை பாலாமடம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இம்மாணவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆண்டனி மகன் அபி, சாஜின் மகன் சாவியோ, சூசை ஆன்றணி மகன் ஆலன் பிரிஸ்கோ ஆகியோா் தூத்தூா் கல்லூரி வளாகம் பகுதியில் விளையாடிவிட்டு வியாழக்கிழமை மாலையில் பூந்தோப்பு காலனி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனராம். அப்போது வள்ளவிளை கோயில்வளாகம் பகுதியைச் சோ்ந்த ரசிலின் மகன் பாஜியோ ரசிலின் (23) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் டானியேல் எக்ஸரோன் மீது மோதியதில் மாணவா் பலத்த காயமடைந்தாா். அம்மாணவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் டானியேல் எக்ஸரோன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் இன்பராஜ் வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் மோகன் ஜாஸ்லின் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com