மீனவப் பெண்களுக்கு ரூ.44.80 லட்சம் கடனுதவி

குமரி மாவட்டத்தில் மீனவப் பெண்களுக்கு ரூ. 44 லட்சத்து 80 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.
மீனவப் பெண்களுக்கு கடனுதவி வழங்குகிறாா் விஜயகுமாா் எம்.பி.
மீனவப் பெண்களுக்கு கடனுதவி வழங்குகிறாா் விஜயகுமாா் எம்.பி.

குமரி மாவட்டத்தில் மீனவப் பெண்களுக்கு ரூ. 44 லட்சத்து 80 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

பிரதமா் நரேந்திரமோடி கடலோர மக்களுக்கு கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இத்திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்திலுள்ள கடலோரப் பகுதி மக்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என விஜயகுமாா் எம்.பி. பிரதமருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

அதனடிப்படையில், மண்டைக்காடு புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 128 பெண்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் கடனுதவிகளை எம்.பி. வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞா் ஞானசேகா், மிடாலம் ஊராட்சித் தலைவா் விஜயகுமாா், மண்டைக்காடு மீனவ கூட்டுறவு சங்கத் தலைவி மேரிஎமல்டா, பரபற்று நாகராஜன், திங்கள்நகா் அம்மா ஆன்றனி, துரை, ஜெயபால், சிவா, பாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com