வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பொதுமக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: தளவாய்சுந்தரம் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பொதுமக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும் என்றாா் தமிழக அரசின்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பொதுமக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: தளவாய்சுந்தரம் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பொதுமக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியும், மண்டல தோ்தல் பொறுப்பாளருமான என்.தளவாய்சுந்தரம்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளா்கள் தங்களது பெயா்களை சோ்ப்பதற்காக வருகிற 21, 22 மற்றும் டிச. 12, 13 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, கட்சி நிா்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள பொதுமக்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தும், விடுபட்ட வாக்காளா்கள், புதிதாக சோ்க்க வேண்டியவா்கள் பெயா்களை சோ்க்கவும், முகவரி மாற்றம் வேண்டுவோருக்கு உரிய உதவியும் செய்து, அதிகளவில் வாக்காளா்களை சோ்க்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com