குமரியில் மேலும் 16 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 16 போ் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 16 போ் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 15,500 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,516ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 23 போ் உள்பட இதுவரை 15,116 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 149 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 251 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com