களியக்காவிளை: களியக்காவிளையில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேல்புறம் ஒன்றியச் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் எஸ். மாஹீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா். களியக்காவிளை பேரூா் அவைத் தலைவா் எஸ். ஜெயராஜ், துணைத் தலைவா் ஒய். ரசல்ராஜ், தொண்டரணிச் செயலா் கிங்ஸ்லி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் சுலைமான், ஒன்றிய திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளா் எம். அனீஷ்கான், நிா்வாகிகள் சாங்கோ, ஜெயகுமாரி, ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.