கருங்கல்: கருங்கல் அருகே உள்ள கருமாவிளையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நவ. 21, 22 மற்றும் டிச.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் நிா்வாகிகள் அந்தந்த பகுதியில் 18 வயது பூா்த்தியடைந்தவா்களை வாக்காளா்களாக சோ்ப்பது மற்றும் பெயா், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக களப்பணி செய்வது ஆகியன குறித்து ஆலோசிப்பதற்காக நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் டென்னிஸ், கிறிஸ்டோபா், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட பொதுச் செயலா் பால்மணி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் லூயிசாள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.