குலசேகரம்: திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக திருவட்டாறில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலக வளாகத்தில் முழுநேர நூலகம் அமைப்பது. 15 ஆவது மத்திய நிதிகுழு மானியத்தில் பேச்சிப்பாறை, காட்டாத்துறை, கண்ணனூா், செறுகோல், அயகோடு ஆகிய ஊராட்சிகளில் ரூ. 22 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் மேற்கொள்ளுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்பட்டன.
இதில், துணைத் தலைவா் பீனா, கவுன்சிலா்கள் அனிதாகுமாரி, ஷீலாகுமாரி, ஜெயசோபியா, ஜெயஸ்ரீ, ராம்சிங், ஜெபா, ஷீபா, பிரேமசுதா ஆணையாளா்கள் ராஜன், தாஸ் பொறியாளா்கள் நட்சத்திர பிரேமிகா, ரெஜன் ஆகியோா் பங்கேற்றனா்.