கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,533ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய 31 போ் உள்பட இதுவரை 15,147 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 135 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.