8 மாதங்களுக்குப் பின்குமரியில் படகு சேவை தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரியில் 8 மாதங்களுக்குப் பின்னா் செவ்வாய்க்கிழமை மாலை படகு சேவை தொடங்கியது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, கரோனா பொது முடக்கத்தால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால், பகவதியம்மன் கோயிலில் வழிபாடு நடைபெறுகிறது. வார இறுதி நாள்களில் ஓரளவுக்கு உள்ளூா் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
மேலும், சுவாமி விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகு சேவையைத் தொடங்க வேண்டும் என வியாபாரிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி கரோனா ஆய்வுக்காக நாகா்கோவிலுக்கு வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தாா். எனினும், இரு வாரங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் படகு சேவை தொடங்கியது. இதில், 44 சுற்றுலாப் பயணிகள் இருந்தனா். கடலில் குறிப்பிட்ட தொலைவு வரை சோதனை ஓட்டமாக சென்று கரை திரும்பியது.
இதுகுறித்து பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறுகையில், நீண்ட நாள்களுக்குப் பின் சுமாா் 44 பயணிகளுடன் சோதனை ஓட்டத்துடன் படகு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை திறக்கப்படாததால், கடலில் சிறிது தொலைவுக்கு மட்டும் படகு சென்று கரைக்கு திரும்பியது. புதன்கிழமை (நவ.25) முதல் வழக்கம் போல காலை 8 மணிக்கு படகுசேவை தொடங்கி மாலை 4 வரை நடைபெறும் என்றாா் அவா்.
நிசப்தமான கடல்: நிவா் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், பேரிரைச்சலுடன் காணப்படும் கன்னியாகுமரி கடல் அலைகள் ஏதுமின்றி நிசப்தமாக செவ்வாய்க்கிழமை காட்சியளித்தது.