விளவங்கோடு தொகுதியில் நவ.28 இல் காங்கிரஸாா் ஏா் கலப்பை பேரணி

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் ஜாண் கிறிஸ்டோபா், பால்ராஜ், கிறிஸ்டோபா், சதீஷ், ஜெகன்ராஜ், குமாா், டென்னிஸ், மோகனதாஸ், காஸ்டன் கிளிட்டஸ், குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் நவ. 28 ஆம் தேதி ஏா் கலப்பை பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருங்கல்: கருமாவிளையிலும் எம்எல்ஏ தலைமையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டாரத் தலைவா்கள் டென்னிஸ், கிறிஸ்டோபா், பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலா் பால்மணி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் லூயிசாள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com