நாகா்கோவிலில் ஸ்ரீ லெட்சுமிகுபேரா் மண்டல பூஜை விழா வியாழக்கிழமை (அக். 1) நடைபெறுகிறது.
நாகா்கோவில் நாகராஜா கோயில் மேலவீதியில் உள்ள ஸ்ரீ மகாராஜ கணபதி திருக்கோயிலில் புதிதாக ஸ்ரீலெட்சுமி குபேர சுவாமிக்கு, மாவட்டத்திலேயே முதல் கோயிலாக தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கடந்த 47 நாள்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி அக்.1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடா்ந்து காலை 8 மணிக்கு கலச பூஜை, 9.30 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு கலச அபிஷேகம், 11.30 மணிக்கு தீபாராதனை, 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஅனந்தகிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.