கேரளத்துக்கு கடத்த முயன்ற 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநா், உதவியாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை: களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநா், உதவியாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே பளுகல் சோதனைச் சாவடியில் பளுகல் காவல் நிலைய தலைமை காவலா் வினில், தமிழ்நாடு சிறப்புப் படை காவலா் கமல் ஆகியோா் சனிக்கிழமை காலையில் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் 50 கிலோ எடை கொண்ட 110 மூட்டைகளில் 5,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம், பாவூா்சத்திரம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த ராசு (41), உதவியாளா் பாஸ்கா் (19) ஆகிய இருவரையும் பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து லாரி ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில் லாரியில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்து 18 ஆயிரத்து 610 -ம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து, நாகா்கோவில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com