முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் கரோனாபாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்தது
By DIN | Published On : 04th October 2020 12:54 AM | Last Updated : 04th October 2020 12:54 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,918-ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 13,011-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை குணமான 91 போ் உள்பட இதுவரை 11,995 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா உதவி மையம், தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 792 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 224 போ் உயிரிழந்துள்ளனா்.