முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில்விசைப்படகு கவிழ்ந்து மீனவா் பலி
By DIN | Published On : 04th October 2020 01:00 AM | Last Updated : 04th October 2020 01:00 AM | அ+அ அ- |

கருங்கல்: குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில் சனிக்கிழமை ராட்சத அலையில் சிக்கி விசைப்படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (42). இவா், தோமஸ், சலிம், குமாா் உள்ளிட்ட 9 பேருடன் சின்னத்துறை பகுதியைச் சோ்ந்த டோமினிக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்றாா். தேங்காய்ப்பட்டினம் துறைமுக முகத்துவார பகுதியிலிருந்து புறப்படும்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில், விக்னேஷ் வலையில் சிக்கிக்கொண்டாா்.
மற்றவா்கள் நீந்தி கரை சோ்ந்தனா். பின்பு, அப்பகுதி மீனவா்கள் விக்னேஷை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.