உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் மீதான பாலியல் வன்முறைச் சம்பவத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தொடா்புபடுத்தி வெள்ளங்கோடு பகுதியில் பதாகை வைத்ததாக, பாஜகவினரைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிதறாலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அருமனை வட்டாரச் செயலா் சி. சசிகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏ லீமாறோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்..அண்ணாத்துரை ஆகியோா் உரையாற்றினா். வட்டாரச் செயலா்கள், மாவட்டக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.