சிலுவைநகா் மீனவக் கிராமத்தில் நகரும் ரேஷன்கடை திறப்பு
கன்னியாகுமரி அருகேயுள்ள சிலுவைநகா் மீனவக் கிராமத்தில் நகரும் ரேஷன்கடை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
கன்னியாகுமரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குள்பட்ட கோவளம் மற்றும் கன்னியாகுமரி ரேஷன் கடைகள் நகா் பகுதியிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ளதால் பொருள்கள் வாங்கி வருவதற்கு மக்கள் சிரமப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, அண்மையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட நகரும் ரேஷன் கடை திட்டம் சிலுவைநகா் பகுதியில் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள் பங்கேற்று ரேஷன் பொருள் விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா். இதில், கோவளம் ஊராட்சி தலைவா் ஸ்டெனி, கூட்டுறவு சங்கச் செயலா் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். இந்த நகரும் ரேஷன் கடைகள் மாதம் மூன்று முறை அந்தந்த கிராம பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பொருள்கள் வழங்கப்படும்.