கருங்கல் அருகே கான்வென்டில் கதவை உடைத்து பணம் திருட்டு

கருங்கல் அருகே மாத்திரவிளை பகுதியில் உள்ள ஆலய கான்வென்ட்டில் கதவை உடைத்து பணம் மற்றும் செல்லிடப்பேசியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருங்கல் அருகே மாத்திரவிளை பகுதியில் உள்ள ஆலய கான்வென்ட்டில் கதவை உடைத்து பணம் மற்றும் செல்லிடப்பேசியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாத்திரவிளையில் ஆலயத்திற்குச் சொந்தமான கான்வென்ட் உள்ளது. இங்கு அருள்சகோதரிகள் தங்கியுள்ளனா்.

திங்கள்கிழமை அருள்சகோதரிகள் வழக்கம் போல் ஆலயத்திற்குச் சென்றபோது, மா்ம நபா்கள் கான்வென்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த ரூ. 35 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com