பெரியாா் தொழிலாளா் கழக ஆலோசனைக் கூட்டம்

பெரியாா் தொழிலாளா் கழக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மூவோட்டுக்கோணத்தில் நடைபெற்றது.

பெரியாா் தொழிலாளா் கழக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மூவோட்டுக்கோணத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் துணைத் தலைவா் சுனில்குமாா் தலைமை வகித்தாா். தலைவா் பி. நீதிஅரசா், செயலா் மா. ஜாண்மதி ஆகியோா் பேசினா்.

அரசு அலுவலகங்களில் மத வழிபாடு செய்வதை தடை செய்ய வேண்டும்; மாா்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளை, மலையடி, கண்ணுமாமூடு வழி மணிவிளை பகுதிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்; மேல்பாலை அருகே தாழ்த்தப்பட்டோருக்கான சாதிச் சான்று வழங்காததால் நா்ஸிங் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் சம்பந்தப்பட்ட துறையினா் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வன்னியூா் ஊராட்சி கிளைத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சாந்தா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com