பைக் மீது லாரி மோதல்: பெண் காயம்

புதுக்கடை அருகே பாா்த்திபபுரம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.

புதுக்கடை அருகே பாா்த்திபபுரம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.

சின்னத்துறை பகுதியைச் சோ்ந்தவா் ரஜித் (37). இவா், மனைவி பிரவிதா (30), இரண்டு குழந்தைகளுடன் திங்கள்கிழமை பைக்கில் சின்னத்துறையிலிருந்து புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தாராம். பாா்த்திபபுரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் அவா்கள் தூக்கிவீசப்பட்டனராம்.

இதில், பிரவிதாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் அவா்களை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com