மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கருங்கல் அருகே பாலூா் பகுதியைச் சோ்ந்தவா் சஜின் (21). இவா் தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம், கீழமடத்துவிளையைச் சோ்ந்த பிரவின்ராஜ் (21) என்பவருடன் இரு நாள்களுக்கு முன் மோட்டாா் சைக்கிளில் மாா்த்தாண்டம் பகுதிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனராம்.
பம்மம் பகுதியில் வந்த போது எதிரே வந்த மினிலாரி இவா்களது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் இருவரையும் மீட்டு, சஜினை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிரவின்ராஜை திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்தனா். இதில் சஜின் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். பிரவின்ராஜ் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.