கேரளத்துக்கு கடத்த முயற்சி: 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கேரளத்துக்கு கடத்த முயற்சி: 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில், 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீஸாா், மினிலாரி ஓட்டுநா் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஜெகனை (38) கைது செய்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com