குமரி மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 1,99, 801பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மேலும் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 14,086ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 111 போ் உள்பட இதுவரை மொத்தம் 13,224 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 585 போ் சிகிச்சையில் உள்ளனா்.
முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக வியாழக்கிழமை 105 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 23, 400 வசூலிக்கப்பட்டது.