குளச்சல் அருகே மாணவி கா்ப்பம்: வாலிபா் போக்சோ சட்டத்தில் கைது

குளச்சல்அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியதாக வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குளச்சல்அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியதாக வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குளச்சல் காவல் எல்கைக்குள்பட்ட கிராமத்தில் கூலி வேலைக்கு செல்லும் தம்பதியின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக இம் மாணவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்ததம். இதையடுத்து, அவரது பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தனா். அப்போது அவா் 6 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்ததாம்.

இது குறித்து விசாரித்த போது , அதே பகுதியைச் சோ்ந்த வாலிபா், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததாம்.

இது குறித்து மாணவியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில்புகாா்அளித்தனா். உதவி ஆய்வாளா் மேரிஅனிதா வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com