குழித்துறை ஆற்றில் குளித்த இளைஞரை இழுத்துச் சென்ற வெள்ளம்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் ஈடுபட்டனா்.

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அவரை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பெருஞ்சாணி அணை நீா்மட்டம் அதிகபட்ச கொள்ளளவை நெருங்கும் நிலையில், வெள்ளிக்கிழமை 3 ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் குழித்துறை அருகே கழுவன்திட்டை சாம்ராஜ் மகன் சஜிகுமாா் (29), வா்ணம் பூசும் தொழிலாளி. இவா் தனது நண்பா்கள் மூன்று பேருடன் குழித்துறை தடுப்பணை பகுதிக்கு வெள்ளிக்கிழமை மாலையில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது மூன்று பேரும் குளித்துவிட்டு, கரையேறிய நிலையில் சஜிகுமாரை வெள்ளம் இழுத்துச் சென்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடுபணியில் ஈடுபட்டனா்.

விளவங்கோடு வட்டாட்சியா் ராஜமனோகரன் மற்றும் களியக்காவிளை போலீஸாா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com