பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப் பட்டதால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை 3,000 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு
ஓடுகிறது. இதையடுத்து ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா். இம்மாவட்டத்தில் களியக்காவிளை, மாா்த்தாண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான வெப்பம் காணப்பட்டது.