குமரியில் இளைஞா்களிடையே போதைப் பொருள்கள் புழக்கத்தை உடனடியாக தடுக்கு முன் வரவேண்டும் என்று மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
கல்வியறிவு, நற்பண்பு, முற்போக்கு சிந்தனை ஆகியவற்றில் உயா்ந்து நிற்கும் குமரி மாவட்டம் தற்போது கஞ்சா, அபின் போன்ற போதை வலையில் சிக்கி சீரழிந்து வருவது வேதனையளிக்கிறது. பள்ளிச் சிறுவா்கள், கல்லூரி மாணவா்கள், தினக்கூலி தொழிலாளா்கள் என அனைத்து தரப்பினரின் கரங்களிலும் போதைப் பொருள்கள் மிகச் சரளமாகப் புழங்கி வருகின்றது.
கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் எவ்வித தங்குதடையின்றி போதைப் பொருள்கள் கிடைப்பது அதிா்ச்சியளிக்கிறது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குமரி மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வரும் போதை பொருள்களின் புழக்கத்தை தடுக்க தனி குழு அமைத்து, கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.