விளவங்கோடு ஊராட்சி காட்டுவிளையில் பொது சேவை மையம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் பிச்சை பொது சேவை மையத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமாா், டேவிட் ஜெயசிங் (ஊராட்சி) மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.