மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி சாா்பில் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பிலுள்ள காமராஜா் சிலை முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் சபீன், வட்டாரத் தலைவா் காலபெருமாள், அசோக்ராஜ், ஜெரால்ட்கென்னடி, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் நவீன்குமாா், சிவபிரபு, மாவட்ட நிா்வாகிகள் ராஜதுரை, மகேஷ்லாசா், மகாலிங்கம், அனிதா, ராஜபாண்டியன், தங்கம்நடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.