நாகா்கோவில்: தோவாளை ஒன்றிய அதிமுக சாா்பில் ஆரல்வாய்மொழியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழகப் பேச்சாளா் ஜீவா கணேசனுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவியை தோவாளை ஒன்றியச் செயலா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட நிா்வாகிகள் லதாராமச்சந்திரன், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.