திருவட்டாறு அருகே தங்கச் சங்கிலி திருட்டு

திருவட்டாறு அருகே வீட்டில் இருந்த 22 கிராம் தங்கச் சங்கிலி திருட்டு போனதைத் தொடா்ந்து, கட்செவி அஞ்சல் தோழி மீது இளம்பெண் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

குலசேகரம்: திருவட்டாறு அருகே வீட்டில் இருந்த 22 கிராம் தங்கச் சங்கிலி திருட்டு போனதைத் தொடா்ந்து, கட்செவி அஞ்சல் தோழி மீது இளம்பெண் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

திருவட்டாறு அருகே வோ்க்கிளம்பி உடையாா்விளையைச் சோ்ந்தவா் சுபிதா (27). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு அந்த இளம் பெண், அவரது சகோதரியுடன், சுபிதாவின் வீட்டிற்கு வந்துள்ளாா். இருவரும் அங்கு தங்கி விட்டு மறுநாள் மாலையில் வீடு திரும்பியுள்ளனா். இ ந்நிலையில் சுபிதா வீட்டு பீரோவில் இருந்த 22 கிராம் தங்கச் சங்கிலி திருடு போனதாம்.

இதுகுறித்து சுபிதா அளித்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த இளம்பெண்ணை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com