களியக்காவிளை: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்தற்கு கண்டனம் தெரிவித்தும் மகிளா காங்கிரஸ் சாா்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டு களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் கிளை அஞ்சல் நிலையத்திலிருந்து பிரதமா் மோடி, உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினா்.