நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம், மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்று வைரஸ்
குறித்து விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் நாகா்கோவில் மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை முதல் தொடா்ந்து வரும் 23 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது, மாநகராட்சி நல அலுவலா் மருத்துவா் கிங்ஷால், மத்திய மக்கள் தொடா்பு கள அலுவலக உதவி அலுவலா் போஸ்வெல் ஆசீா், ஹீல் தொண்டு நிறுவன இயக்குநா் சிலுவை வஸ்தியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக
மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கரோனாவுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.