முதிா்ந்த ரப்பா் மரங்களை அகற்ற அரசு அனுமதிக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடியினா் குடியிருப்பு பகுதிகளில் உள்ள முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டி அகற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட திமுக செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடியினா் குடியிருப்பு பகுதிகளில் உள்ள முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டி அகற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட திமுக செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பியுள்ள மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டமலை, பச்சமலை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் காணியின மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த பகுதிகளில் ரப்பா், வாழை மற்றும் பயிா் வகைகள் விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனா்.

இப்பகுதிகளில் முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டி அகற்றி விட்டு பருவ காலங்களில் புதிய ரப்பா் கன்றுகள் நடுவது வழக்கம். ஆனால் கரோனா தொற்று காரணமாத முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டுவதற்கு அரசு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com