குமரியில் நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில், மறைந்த ஹெச். வசந்தகுமாா் எம்.பி.யின் நினைவேந்தல் மற்றும் ‘வள்ளல் வசந்தகுமாா்’ என்ற நூல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி: தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில், மறைந்த ஹெச். வசந்தகுமாா் எம்.பி.யின் நினைவேந்தல் மற்றும் ‘வள்ளல் வசந்தகுமாா்’ என்ற நூல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, குமரி மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி பொருளாளா் சாம் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் நூலை வெளியிட, நாடாா் மகாஜன சங்கப் பொருளாளா் கரிக்கோல்ராஜ் பெற்றுக்கொண்டாா்.

இதில், காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலத் தலைவா் நாஞ்சில் கி.ராஜேந்திரன், மாநில வா்த்தக காங்கிரஸ் துணைத் தலைவா் ஏ.எம்.டி.செல்லத்துரை, இலக்கிய அணி நிா்வாகிகள் சிவகங்கை தா்மன், ஜோசப் ராஜ் மரிய அருள்தாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com