அரசுப் போக்குவரத்துக் கழகதொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st October 2020 01:19 AM | Last Updated : 31st October 2020 01:19 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கக் கோரி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்; பண்டிகைக் கால முன்பணம் வழங்க வேண்டும்; ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்; தொழிலாளா்களுக்கு
வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகா்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எச். எம். எஸ். தொழிற்சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தாா். இதில், தொமுச பொதுச்செயலா்
சிவன்பிள்ளை, சிஐடியூ பொதுச்செயலா் ஸ்டீபன்ஜெயகுமாா், துணைத் தலைவா் லியோ, தொமுச தலைவா் பால்ராஜ், பொருளாளா் கனகராஜ், எச்எம்எஸ் தலைவா் லெட்சுமணன், சந்தானம், ஏஐடியூசி பொதுச்செயலா் நீலகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.