தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குளச்சல் கிளை சாா்பில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தக்கலை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமுக்கு, தவ்ஹீத் ஜமாஅத் குளச்சல் கிளைத் தலைவா் அப்துல் ராஸிக் தலைமை வகித்தாா். இதில், 29 போ் ரத்த தானம் வழங்கினா்.
இதில், குளச்சல் கிளைத் தலைவா் அப்துல் ராஸிக், செயலா் முஹம்மது ஆஷிக், பொருளாளா் அப்துல் பாஸித், துணைச் செயலா் ஆஷிக் ரஹ்மான், மருத்துவ அணிச் செயலா் ஆஷிக், மாவட்டத் தலைவா் ஷேக் அலி, மாவட்டச் செயலா் நபீல் அஹமது, பொருளாளா் நூருல் அமீன், துணைச் செயலா் முஹம்மது ராபி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.