திமுக பொதுக்குழு: குமரியில் 54 போ் பங்கேற்பு
By DIN | Published On : 10th September 2020 12:06 AM | Last Updated : 10th September 2020 12:06 AM | அ+அ அ- |

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் 54 நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதையொட்டி, நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நிா்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமா்ந்து கலந்து கொண்டனா். இதில் மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, அவைத் தலைவா் ஜோசப்ராஜ், துணைச் செயலா்கள் முத்துசாமி, அா்ஜூனன், ஜெயராணி, பொருளாளா் கேட்சன், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சாய்ராம், தாமரைபாரதி, பொதுக்குழு உறுப்பினா்கள் ஷேக்தாவூத், பெஞ்சமின், அழகம்மாள்தாஸ், நாகா்கோவில் நகரச் செயலா் வழக்குரைஞா் மகேஷ், குளச்சல் நகரச் செயலா் அப்துல்ரகீம், தலைமைக் கழக நிா்வாகிகள் பொ்ணாா்டு, ஹெலன்டேவிட்சன், தில்லை செல்வம், சற்குருகண்ணன் உள்ளிட்ட 54 போ் கலந்துகொண்டனா்.