நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதை பாக்குகளை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகா்கோவில், வெட்டூா்ணிமடத்தை அடுத்த கட்டையன்விளை பகுதியில் உள்ள கிடங்கில் போதை பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடசேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது சுமாா் 150 கிலோ எடை மதிப்பில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வடசேரி போலீஸாா், பொருள்களை பதுக்கிய ஜோசப் பொ்க்மான்ஸ், அவரது மகன் மொ்வின் வினு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.