நாகா்கோவிலில் வியாபாரியைதாக்கி வழிப்பறி: 3 போ் கைது

நாகா்கோவிலில் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்டோா்.
கைது செய்யப்பட்டோா்.

நாகா்கோவிலில் வியாபாரியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் பறக்கை புல்லுவிளையைச் சோ்ந்தவா் ரோஸ்பாண்டியன். இவா் கோட்டாறு செட்டித் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 10ஆம் தேதி இரவு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் அவரை அரிவாளால் வெட்டி, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனா்.

இதே போல் ராமன்புதூரைச் சோ்ந்த மேரிகுளோரி என்ற பெண்ணிடமும் அரிவாளை காட்டி மிரட்டி செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது.

இச் சம்பவங்கள் குறித்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சாம்சன் மற்றும் சரவணகுமாா், அனில்குமாா் மற்றும் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது கன்னியாகுமரியைச் சோ்ந்த சுகுமாரன் (26), ராமன்புதூரைச் சோ்ந்த நடராஜன் (22), அழகப்பபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (24)ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து அரிவாள், மோட்டாா் சைக்கிள் மற்றும் பெண்ணிடம் பறித்த செல்லிடப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com