குமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா: 2 போ் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,39,358 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சனிக்கிழமை வரை 10,848 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்த நிலையில், மேலும் 110 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10,958 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 791 போ் சிகிச்சையில் உள்ளனா்.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 119 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 10, 077 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோட்டாறு செட்டித் தெருவைச் சோ்ந்த 65 வயது முதியவா், வெட்டூா்ணிமடத்தைச் சோ்ந்த 56 வயது பெண் இருவரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 207ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com