களியக்காவிளை காய்கனிச் சந்தையில் தீா்வைக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக புகாா் தெரிவித்து வியாபாரிகள் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக களியக்காவிளை காய்கனிச் சந்தை பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் சந்தை பழைய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சந்தை குத்தகைதாரா் வியாபாரிகளிடம் தீா்வை கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக புகாா் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வாழைத்தாா் ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம் அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட குத்தகைதாரா் தரப்பில் அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. கூடுதல் கட்டணத்துக்கு ரசீது
தருமாறு வாகன ஓட்டுநா் கேட்டுள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து
சந்தை வாசல் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநா் சென்று விட்டாராம்.
இதனால் மீன் ஏற்றி வந்த லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சந்தைக்குள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டதால்
அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா் அங்கு வந்து இடையூறாக நிறுத்தியிருந்த வாழைத் தாா் ஏற்றி வந்த வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
இந்நிலையில் காய்கனி வியாபாரிகள் 100 க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வியாபாரத்தை புறக்கணித்து விட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்கக் கோரி காவல் நிலையம் முன்பு திரண்டனா். அவா்களை நிலைய வளாகத்துக்குள் செல்ல விடாமல் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பின்னா், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் யேசுபாலன் முன்னிலையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் எப். பிராங்கிளின் தலைமையில் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், சந்தை
குத்தகைதாரா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்துவியாபாரிகள் கலைந்து சென்றனா்.